

சென்னை,
நான் கிரிக்கெட்டை பின்தொடர விராட் கோலி தான் காரணம் என நட்சத்திர டென்னிஸ் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
நான் கிரிக்கெட்டைப் பின்தொடர ஆரம்பித்ததற்கு காரணம் விராட் கோலிதான். அவர் என் அருமை நண்பர், நான் மதிக்கும் மற்றும் போற்றும் ஒரு நபர். நான் இந்தியா வரும்போது, இருவரும் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடி, நேர்மறை எண்ணங்களைப் பரப்பி, விளையாட்டுகளைக் கொண்டாடலாம் என்று நம்புகிறேன். என தெரிவித்துள்ளார்.