

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 6 வெற்றி, 7 தோல்வி என்று இதுவரை 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இது தான் அந்த அணியின் கடைசி லீக் ஆட்டம் ஆகும். பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த மோதலில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தோற்றால் வெளியேறுவதை தவிர வழியில்லை. அது மட்டுமின்றி 2-3 அணிகள் 14 புள்ளிகளுடன் இருக்க வாய்ப்பு இருப்பதால் ரன்ரேட்டையும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். தொடரின் கடைசி பகுதியில் சிறப்பாக விளையாடி மீண்டுள்ள மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மாவும் (கடைசி 6 ஆட்டத்தில் 77 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்) பார்முக்கு திரும்பினால் அந்த அணி இன்னும் வலுவடையும்.