

சென்னை,
சர்வதேச கால்பந்து சங்க (பிபா) தலைவர் ஜியானி இன்பான்டினோ, உலகக் கோப்பை போட்டிக்கான பங்குகளை தனியாருக்கு விற்க தன்னிச்சையாக எடுத்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். இருந்தாலும் இன் பான்டினோ மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனெனில் பல நாட்டு கால்பந்து சம்மேளனங்கள் அவருக்கு எதிராக திரும்பி இருக்கின்றன.
இந்த நிலையில் அவரை மீண்டும் தலைவராக தேர்ந்து எடுப்பதற்கான ஆதரவை பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் நேற்று அதிரடியாக திரும்ப பெற்றது. 'பிபா' தலைவர் மீது தாங்கள் வைத்திருந்த நம்பிக்கை தகர்ந்து விட்டதாக பிரான்ஸ் கால்பந்து சம்மேளன தலைவர் பிலிப் டியாலோ தெரிவித்துள்ளார்.