

சியாட்டில்
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில் செனகல் முன்னிலை பெற்றுள்ளது.
பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் மற்றும் செனகல் அணிகள் விளையாடின.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் சியாட்டில் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 24-வது நிமிடத்தில் முதல் கோல் அடிக்கப்பட்டது. செனகல் அணியின் வீரர் ஹபீப் டையர்ரா முதல் கோலை போட்டார்.
எனினும், அதன்பின்னர் இரு அணிகளின் தரப்பிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-1 என செனகல் முன்னிலை பெற்றுள்ளது. போட்டியின் முதல் பாதியில் எந்த அணிக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்படவில்லை.