புதுச்சேரி

தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

காரைக்காலில் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு.

தினத்தந்தி

காரைக்கால்

காரைக்கால் வலத்தெருவில் வசித்து வருபவர் கார்த்தி (வயது38). மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர். இவருக்கும், சத்யா என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்தது.

இது குறித்து காரைக்கால் நகர போலீசில் கார்த்தி புகார் தெரிவித்தார். இந்த நிலையில் தன் மீதே போலீசார் வழக்கு போட்டு விசாரிப்பதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன் பாட்டிலில் கொண்டு வந்த டீசலை, உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று கார்த்தி மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு