செய்திகள்

வறண்டு கிடக்கும் வாய்க்கால்கள்; கடைமடை பகுதி விவசாயிகள் வேதனை

போதிய அளவு தண்ணீர் வராததால் தஞ்சை மாவட்ட கடைமடை பகுதியில் வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

திருச்சிற்றம்பலம்,

டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தைவிட முன்னதாக தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு விவசாய பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும் என விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்த மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து, 16-ந் தேதி கல்லணை திறக்கப்பட்டது.

தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டும் வருகிறது. தமிழகத்துக்கு கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரை வழக்கமாக இந்த ஆண்டும் தர மறுத்தால் மழை பெய்தால் மட்டுமே இந்த ஆண்டு விவசாய பணிகளை தொடங்க முடியும் என்ற பரிதவிப்பில் விவசாயிகள் உள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்