மாவட்ட செய்திகள்

10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தேனி அல்லிநகரத்தில் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

தேனி :

தேனி அல்லிநகரம் வெங்கலா கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ்பாண்டியன். இவரது மனைவி கார்த்திகை மலர். இவர்களது மகள் கனகபிரியா (வயது 15). இவர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் பாண்டியன் இறந்துவிட்டார். இதனால் கனகபிரியா மனமுடைந்து காணப்பட்டார்.

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் வாழ்க்கையில் வெறுப்படைந்தபடி அடிக்கடி புலம்பி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்குப்போட்டு கனகபிரியா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது யாஹியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்