மாவட்ட செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 185 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் தாய், மகன் உள்பட 3 பேர் கைது

குமாரபாளையத்தில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 185 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தாய், மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் ஒரு வீட்டில் முறைகேடாக கோவாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் மதுவிலக்கு போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டபோது, வீட்டில் விற்பனை செய்வதற்காக 185 போலி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சேலத்தை சேர்ந்த மணிவேல் (வயது 25), அவரது தாய் பூங்கொடி (48) மற்றும் சங்ககிரியை சேர்ந்த மயில்சாமி (28) ஆகிய 3 பேர் மீது மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 185 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு