மாவட்ட செய்திகள்

புனேவில் இருந்து தமிழகத்துக்கு 2 லட்சம் தடுப்பூசிகள் வந்தன

புனேவில் இருந்து தமிழகத்துக்கு 2 லட்சம் தடுப்பூசிகள் வந்தன.

தினத்தந்தி

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 4 கோடியே 40 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன.

இந்தநிலையில் புனேவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 17 பெட்டிகளில் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. தமிழகத்துக்கு வந்த தடுப்பூசிகள், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை வந்த தடுப்பூசிகள், உடனடியாக மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்