மாவட்ட செய்திகள்

உலகளாவிய டெண்டரில் கொரோனா தடுப்பூசி வழங்க 4 நிறுவனங்கள் விருப்பம்: மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே

மராட்டிய அரசு பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மருந்து வாங்க உலகளாவிய டெண்டர் விட்டுள்ளது.

தினத்தந்தி

இந்த டெண்டருக்கு விருப்பம் தெரிவித்து உள்ள மருந்து நிறுவனங்கள் குறித்து சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-

பைசர், ஜான்சன் அன்ட் ஜான்சன், ஸ்புட்னிக், அஸ்டிரா ஜெனேகா ஆகிய 4 நிறுவனங்கள் தங்களது ஒப்பந்தங்களை விற்பனை ஏஜென்சிகள் மூலம் சமர்ப்பித்து உள்ளன. இதில் சில நிறுவனங்கள் விலையை குறிப்பிடவில்லை. சிலர் எப்போது மருந்து வழங்கப்படும் என்பதை தெரிவிக்கவில்லை. இதுகுறித்து தான் அவர்களிடம் கேட்டு கொண்டு இருக்கிறோம். தற்போது மத்திய அரசு கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய நிறுவன மருந்துகளை மட்டும் இறக்குமதி செய்ய அனுமதித்து உள்ளது. பைசர், மாடர்னா, ஜான்சன் அன்ட் ஜான்சன் போன்ற நிறுவனங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தடுப்பு மருந்து இறக்குமதியில் தேசிய அளவில் சரியான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு