மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்திருந்த 52 யூனிட் மணல் பறிமுதல் வருவாய்த்துறையினர் நடவடிக்கை

சேத்துப்பட்டை அடுத்த கெங்காபுரம் கிராமத்தில் செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து மணல் கடத்தி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு தகவல் கிடைத்தது.

தினத்தந்தி

சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டை அடுத்த கெங்காபுரம் கிராமத்தில் செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து மணல் கடத்தி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேத்துப்பட்டு தாசில்தார் அரிதாஸ், வருவாய் ஆய்வாளர் காயத்திரி, கிராம நிர்வாக அலுவலர்கள் கரிமலை, துரை, சுரேஷ், குமார் மற்றும் உதவியாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது கெங்காபுரம் கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த 52 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர்.

மேலும் மணலை பதுக்கி வைத்திருந்தவர் யார்? என்று வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு