மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த மேலும் 6 பேர் கைது

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த மேலும் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

சென்னையில் சனிக்கிழமை இரவு மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் ஆரம்பித்து, திருவான்மியூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி வரை மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று சாகசம் காட்டுவதை இளைஞர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். போக்குவரத்து விதிமுறைகள் எதையும் கடைபிடிக்காமல் மோட்டார் சைக்கிளில் சென்று சாகசம் காட்டுவது சட்ட விரோதமாக பார்க்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை அன்று நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக சென்ற 14 பேர் பிடிபட்டனர். அவர்கள் சென்ற 7 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இந்த சம்பவத்தில் முகேஷ்(வயது 20), ரோமன்அல்கிரேட்(23), ஹரிகரன்(21), முகமது சாதிக்(20),ரகமத்துல்லா(20), முகமது ஆசிப்(19) ஆகிய 6 இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்