மாவட்ட செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.65 சதவீதம் தேர்ச்சி - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலுமுத்து கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் 95.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 6 ஆயிரத்து 711 மாணவர்களும், 8 ஆயிரத்து 777 மாணவிகளும் சேர்த்து மொத்தம் 15ஆயிரத்து 488 பேர் தேர்வு எழுதினர்.

இவர்களில் 6 ஆயிரத்து 292 மாணவர்களும், 8 ஆயிரத்து 523 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 815 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தத்தில் இது 95.65 சதவீதமாகும்.

மேலும் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 68 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 37 மெட்ரிக் மற்றும் சுயநிதிபள்ளிகள் 51-ம் சேர்த்து மொத்தம் 156 பள்ளிகள் உள்ளன. இதில் 10 அரசு பள்ளிகளும், 7 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 35 மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளும் சேர்த்து 52 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்