மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் ரப்பர் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான டயர்கள் தயாரிக்க பயன்படும் ரப்பர் தூள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

தினத்தந்தி

நேற்று அதிகாலை இந்த தொழிற்சாலையில் பழைய டயர்களை தூளாக்கி அவற்றை சேமிப்பு குடோனில் இருந்து அப்புறப்படுத்தும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. டயர்கள் என்பதால் அந்த பகுதியே கரும்புகை மூட்டமாக மாறியது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 7 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்