மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டம் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினத்தந்தி

சிவகங்கை,

மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் வைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் பிற விழாக்களுக்கு பேனர்கள் வைக்க விரும்பும் ஊராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்திலும், பேரூராட்சி பகுதிகளில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்திலும் மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் சம்பந்தபட்ட நகராட்சி அலுவலகத்திலும் உரிய கட்டணம் செலுத்தி ஒப்புதல் பெற வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடம் 15 தினங்களுக்கு முன்னதாக முன்அனுமதி பெறவேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்கள் சட்டவிரோதமானது. இதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்