மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல்லில் 2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

திண்டுக்கல்:

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பணி ஓய்வுபெறும் போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கருப்பு ஆடை அணிந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவி தமிழ்செல்வி தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் செல்வதனபாக்கியம், பொருளாளர் மல்லிகா, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு