மாவட்ட செய்திகள்

கத்திமுனையில் வாலிபரிடம் பணம் பறித்த அண்ணன், தம்பி கைது

கும்மிடிப்பூண்டி அருகே கத்திமுனையில் வாலிபரிடம் பணம் பறித்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த காயலார்மேடு கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 22). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர் நேற்று எளாவூரில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எளாவூர் பஜாரையொட்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சரத்குமாரை கத்தி முனையில் வழிமறித்து அவரிடம் இருந்து ரூ.500-ஐ பறித்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், 2 பேரையும் தனது மோட்டார் சைக்கிளில் சென்று மடக்கி பிடித்தார். விசாரணையில் அவர்கள், எளாவூரை அடுத்த தலையாரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (26), அவரது தம்பி டால் ஆனந்தன் (24) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன், தம்பி 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் கும்மிடிப்பூண்டி, சிப்காட் மற்றும் ஆரம்பாக்கம் ஆகிய போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு