மாவட்ட செய்திகள்

கீழக்கரை முதியவர் இறுதி சடங்கில் பங்கேற்ற 252 பேருக்கு கொரோனா தொற்று இல்லை - ராமநாதபுரம் கலெக்டர் தகவல்

கீழக்கரையில் கொரோனாவினால் இறந்த முதியவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 252 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான கீழக்கரைக்கு கொண்டு வந்து அடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்புதான் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் இறந்த முதியவரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்பு அவர்கள் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இறந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 252 பேருக்கு ரத்தம், சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை