மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செவிலியரின் மனிதநேயத்துக்கு பாராட்டு

நோயாளிகளுக்கு அவர்களது உறவினர்கள் சாப்பாடு வழங்கி வருகின்றனர். இதனால் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து நோயாளிகளுக்கு அவர்களது உறவினர்கள் சாப்பாடு வழங்கி வருகின்றனர். இதனால் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதையொட்டி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் அனுராதா தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ரூ.21 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்களை வாங்கி அரசு மருத்துவமனை சமையல் கூடத்திற்கு வழங்கினார். அந்த மளிகை பொருட்களை கொண்டு உணவு தயாரிக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. செவிலியரின் இந்த மனிதநேயத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அவரது செயலை தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு டாக்டர்கள் சிலரும் நிதி வழங்க முன்வந்துள்ளனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?