மாவட்ட செய்திகள்

காட்டுப்பன்றி முட்டியதில் சிறுவன் படுகாயம்

தேவதானப்பட்டி அருகே காட்டுப்பன்றி முட்டியதில் சிறுவன் படுகாயம் அடைந்தான்.

தினத்தந்தி

தேனி :

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் விஸ்வரூபன் (வயது 11). மஞ்சளாறு அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் நேற்று அவன் தோட்டத்தில் புல் அறுத்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றி விஸ்வரூபனை முட்டி தள்ளியது.

இதில் படுகாயமடைந்த விஸ்வரூபனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு