மாவட்ட செய்திகள்

ஆரணி அருகே கார் மோதி புதுமாப்பிள்ளை பலி மனைவியை பார்த்துவிட்டு திரும்பியபோது பரிதாபம்

ஆரணி அருகே மோட்டார் சைக்கிளில் ஆற்காடு சென்றுவிட்டு மனைவியை பார்த்துவிட்டு ஆரணிக்கு வந்தபோது கார் மோதி புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

ஆரணி,

ஆரணியை அடுத்த ஆரணிபாளையம் புதுகாமூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் பிரகாஷ் (வயது 29). சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும் ஆற்காடு பகுதியை சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நேற்று ஊருக்கு வந்திருந்த அவர் மோட்டார் சைக்கிளில் ஆற்காடு சென்றுவிட்டு மனைவியை பார்த்துவிட்டு மீண்டும் ஆரணிக்கு வந்து கொண்டிருந்தார். ஆரணி - ஆற்காடு நெடுஞ்சாலையில் அப்பந்தாங்கல் கூட்ரோடு அருகே வரும்போது எதிரே வந்த கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை