மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி

செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள சந்தியகண்டனூரை சேர்ந்தவர் அன்பழகன் மகன் தணிகாசலம்(வயது 35). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி சரிதாவுடன் கெடாரில் நடைபெற்ற உறவினர் இல்ல விழாவில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் அதே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். செஞ்சி அடுத்த கெடார் அருகே வந்த போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, தணிகாசலம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தணிகாசலம் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தணிகாசலம் பரிதாபமாக உயிரிழந்தார். சரிதா காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு