மாவட்ட செய்திகள்

குயில்தோப்பு விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு: மகளிர் ஆணைய தலைவியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் - பா.ஜ.க. வலியுறுத்தல்

குயில்தோப்பு விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள மகளிர் ஆணைய தலைவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

பா.ஜ.க. மாநில செயலாளர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை கருவடிக்குப்பத்தில் பாரதியார் கவிதை எழுதிய குயில்தோப்பு பகுதியை போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக புதுவை மகளிர் ஆணைய தலைவி ராணி உள்பட 11 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகள் பலர் உள்ளனர்.

பாரதியார் கவிதை எழுதிய குயில் தோப்பிற்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், வெளிநாடுகளில் வாழும் புதுவையை சேர்ந்த குடிமக்களுடைய சொத்துகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இது குறித்து கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மகளிர் ஆணைய தலைவி ராணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

புதுவையில் உள்ள பல அரசு மதுக்கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் ஏலம் விடப்படாமல் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அபகரிக்க நினைக்கின்றனர். இதனை புதுவை மாநில மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

புதுவையில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதன் மீது உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்படுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு