மாவட்ட செய்திகள்

குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக்கோரி திருப்பூரில் 10-வது நாளாக போராட்டம்

குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக்கோரி திருப்பூரில் 10-வது நாளாக போராட்டம்.

தினத்தந்தி

திருப்பூர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய மக்கள் பதிவேடு என்பது உள்பட திட்டங்களை கைவிடக்கோரி இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்திலும் பலூன் விடும் போராட்டம், முற்றுகை போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் செல்லாண்டியம்மன் படித்துறை பகுதியில் திருப்பூர் இளைஞர் கூட்டமைப்பு மற்றும் குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் சார்பாக 10-வது நாளாக நேற்று தொடர் முழக்க தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தையொட்டி அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசியல் கட்சியினர் பலரும் வந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரையாற்றி வருகிறார்கள். போராட்டத்தையொட்டி அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு