மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 600 சாராய பாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது

மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 600 சாராய பாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது.

குத்தாலம்,

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அரசூர் என்ற இடத்தில் சாராயம் கடத்தி வரப்படுவதாக பெரம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பெரம்பூர் போலீசார் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் 180 மில்லி அளவுடைய 600 சாராய பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சாராயத்தை கடத்தி வந்த கோடங்குடி சோலையாம்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கோடங்குடி துரைக்கண்ணு மகன் நடராஜன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி