மாவட்ட செய்திகள்

மும்பையில் மேலும் 1,304 பேருக்கு கொரோனா

மும்பையில் மேலும் 1,304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.58 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

மும்பை,

மும்பையில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்து உள்ளது. நகரில் புதிதாக 1,304 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நகரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 316 ஆக உயர்ந்து உள்ளது.

இதில் 95 ஆயிரத்து 354 பேர் குணமடைந்து விட்டனர். தற்போது 19 ஆயிரத்து 914 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நகரில் குணமானவர்கள் சதவீதம் 78 ஆக உள்ளது.

58 பேர் பலி

இதேபோல மும்பையில் மேலும் 58 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதில் 37 பேர் ஆண்கள். 21 பேர் பெண்கள். இதுவரை 6 ஆயிரத்து 751 பேர் பலியாகி உள்ளனர்.

மும்பையில் நோய் பரவல் இரட்டிப்பு ஆகும் காலம் 89 நாட்களாக உள்ளது. நகரில் தற்போது 582 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. 5 ஆயிரத்து 396 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு