மங்களூரு,
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா பைந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கங்கநாடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் நாராயண ஹெப்பார்(வயது 49). சமையல்காரரான இவருக்கு திருமணம் ஆகி மகாலட்சுமி என்ற மனைவியும், அஸ்வின்குமார்(16), ஐஸ்வர்யலட்சுமி(14) என்ற மகளும் இருந்தனர்.
இந்த நிலையில் சங்கர் நாராயண ஹெப்பாருக்கும், சமையல் வேலைக்கு வந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர். இதுபற்றி மகாலட்சுமிக்கு தெரிய வந்து உள்ளது. அவர் சங்கர் நாராயண ஹெப்பாரை கண்டித்து உள்ளார். ஆனாலும் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை. இதுதொடர்பாக சங்கர் நாராயண ஹெப்பாருக்கும், மகாலட்சுமிக்கும் இடையே அடிக்கடி சண்டை உண்டானது.
கைதான சங்கர் நாராயண ஹெப்பார் மீது போலீசார், குந்தாப்புரா கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நீதிபதி பிரகாஷ் கண்டேரி தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சங்கர் நாராயண ஹெப்பாருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.