மாவட்ட செய்திகள்

பெருந்துறை பகுதியில் ரூ.2¼ கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்

பெருந்துறை பகுதியில் ரூ.2¼ கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

சென்னிமலை,

பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாச்சி ஊராட்சி எருக்காட்டுவலசு காலனியில் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.70 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம், பெரியவிளாமலை ஊராட்சி கண்ணவேளாம்பாளையம் கிராமத்தில் ரூ.33 லட்சம் மதிப்பில் ஜெ.ஜெ.எம் திட்டத்தில் தனியார் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, மேலும் இதே ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்பட ரூ.2 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜைகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெருந்துறை தொகுதி தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அதிகாரி மணிமாலா, உதவி பொறியாளர் அஜய், மாவட்ட கவுன்சிலர் ஏ.வி.பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், துணை தலைவர் உமா மகேஸ்வரன், ஊராட்சி தலைவர்கள் ஜீவானந்தம், சிவகாமி குழந்தைசாமி, பூவிழி, முன்னாள் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர்கள் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி, குழந்தைசாமி, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு