மாவட்ட செய்திகள்

அச்சரப்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி டிரைவர் சாவு

அச்சரப்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

டிரைவர்

சென்னை நுங்கம்பாக்கம், காமராஜர் புரத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 38). டிரைவர். இவர் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள திருமுக்காடு கிராமத்தில் உள்ள தன்னுடைய சகோதரி புஷ்பலதா வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். நேற்று பிற்பகல் டில்லிபாபு சகோதரி வீட்டில் சாப்பிட்டு விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் டில்லிபாபுவை தேடினர்.

பிணமாக கிடந்தார்

அவர் அங்குள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அச்சரப்பாக்கம் போலீசார் டில்லி பாபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக டில்லிபாபுவின் சகோதரி புஷ்பலதா அளித்த புகாரின் பேரில் அச்சரப்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேவதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு