மாவட்ட செய்திகள்

கல்குவாரியில் மூழ்கி 12-ம் வகுப்பு மாணவன் பலி

புனேயில் கல்குவாரியில் மூழ்கி 12-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

புனே,

புனே மாவட்டம் ஜாதவ்வாடி பகுதியை சேர்ந்தவன் கவுதம் சுதிர் (வயது17). 12-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தான். கவுதம் சுதிர் நேற்று முன்தினம் டியூசன் செல்வதாக கூறிவிட்டு நண்பர்களுடன் சாக்கன், மோய் கிராமத்தில் உள்ள கல்குவாரிக்கு சென்றான். அங்கு தேங்கி கிடந்த தண்ணீரில் அவன் நண்பர்களுடன் குளித்தான். அப்போது மாணவன் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினான்.

நண்பர்கள் அவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் கவுதம் சுதிர் தண்ணீரில் மூழ்கி மாயமானான். அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மாணவனை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களாலும் தண்ணீரில் மூழ்கிய மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை