மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், எடையாளம் கிராமத்தை சேர்ந்தவர் அனந்தசயனன் (வயது 28). என்ஜினீயர். இவர் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்து வந்தார். கடந்த 10-ந்தேதி இரவு வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அனந்தசயனனை மீட்டு அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு