மாவட்ட செய்திகள்

திருடிய மோட்டார் சைக்கிளை திருப்பிவிட வந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்...!

திருடிய மோட்டார் சைக்கிளை திருப்பிவிட வந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்

தினத்தந்தி

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி, எல்லீஸ்ரோடு, பெரிய மசூதி தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 59). பூ வியாபாரம் செய்து வருகிறார். வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த இவரது மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இது தொடர்பாக இளங்கோவன் திருவல்லிக்கேணி போலீசில் புகார் கொடுத்தார். உதவி போலீஸ் கமிஷனர் பாஸ்கர் மேற்பார்வையில் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் திருடிய மோட்டார் சைக்கிளை, இளங்கோவன் வீட்டு முன்பு மீண்டும் விடுவதற்காக 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கினார்கள். அதில் ஒருவர் போலீசில் மாட்டினார். இன்னொருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்டவர் பெயர் சூர்யபிரகாஷ் (22). சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி, நாராயணபுரத்தை சேர்ந்தவர். இவர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஆவார். அவர் கைது செய்யப்பட்டார்.

மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. தங்களது தேவைக்காக மோட்டார் சைக்கிளை திருடியதாகவும், தேவை முடிந்தவுடன் மீண்டும் மோட்டார் சைக்கிளை திருடிய இடத்தில் விடுவதற்கு வந்த போது, போலீசாரிடம் மாட்டிக்கொண்டதாகவும் கைதான சூர்யபிரகாஷ் தெரிவித்தார். தப்பி ஓடியவர் பெயர் அமர் என்பதாகும். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு