மாவட்ட செய்திகள்

திருவாலங்காடு அருகே வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருவாலங்காடு அருகே குளிர்சாதன வேன் தீப்பிடித்து முழுவதுமாக எரிந்தது.

தினத்தந்தி

சென்னை தாம்பரத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் பகுதியில் இயங்கும் தனியார் இரும்பு உருக்காலைக்கு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவுக்கு உட்பட்ட திருவாலங்காடு வழியாக குளிர்சாதன வேன் சென்று கொண்டிருந்தது. அதில் 5 தொழிலாளர்கள் இருந்தனர். திருவாலங்காடு அடுத்த வியாசபுரம் பஞ்சாயத்து கூண்டரிகபுரம் என்ற இடத்தில் செல்லும்போது திடீரென வேன் தீப்பற்றி முழுவதுமாக எரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வேனை ஓட்டி வந்த திருமூர்த்தி (வயது 29) வேனில் இருந்த 5 தொழிலாளர்களை இறக்கி அவர்களை காப்பாற்றினார். மேலும் சாலையில் ஓரமாக நிறுத்தியவுடன் முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்