மாவட்ட செய்திகள்

சோதனை சாவடிக்கு தீவைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பேரளம் அருகே சோதனை சாவடிக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே பூந்தோட்டம்-காரைக்கால் சாலையில் பண்டாரவாடை திருமாளம் என்ற கிராமம் உள்ளது. இங்கு போலீசார் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனை சாவடி, கூரை கொட்டகையில் இயங்கி வந்தது.

இந்த சோதனை சாவடி நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அங்கு போலீசார் இல்லை. இதில் சோதனை சாவடி கொட்டகை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.

மர்ம நபர்கள்

இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள், சோதனை சாவடிக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதுதொடர்பாக பண்டாரவாடை திருமாளம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்டாலின், பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோதனை சாவடிக்கு தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்