மாவட்ட செய்திகள்

அரசு மேல்நிலைப் பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே கட்டுமாவடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சமீபத்தில் மழை பெய்ததையடுத்து இந்த பள்ளி வளாகத்தை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து பள்ளி வளாகம் முழுவதும் தேங்கி நிற்கி றது. இதனால் இந்த தண்ணீரில் கொசு, விஷப்பூச்சிகள் உற்பத்தியாகிறது.

மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடும்போது தண்ணீரில் இருக்கும் விஷப்பூச்சிகள் மாணவர்களை கடித்து விடுகிறது. மேலும் டெங்கு, பன்றி காய்ச்சல் பரவிக்கொண்டிருப்பதால் மாணவ-மாணவிகளின் நலன்கருதி கட்டுமாவடி மேல்நிலை பள்ளி வளாகத்தில் தேங்கி இருக்கும் மழைநீரை வெளியேற்றி விட்டு பள்ளி வளாகத்தை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்