வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ரெயில்வே கேட் இருந்தது. இந்த ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் கூடுவாஞ்சேரியில் இருந்து மாடம்பாக்கம், ஆதனூர், காவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
இதனையடுத்து ரெயில்வே கேட்டை மூடிவிட்டு அந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஆனால் சுரங்கப்பாதை பணி மிகவும் மந்தமான நிலையில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.