மாவட்ட செய்திகள்

நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் 10 கிலோ இலவச அரிசி சித்தராமையா பேச்சு

நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

ஏழை மக்கள் யாரும் உணவு இன்றி பசியால் வாடக்கூடாது. வயிறு நிறைய சாப்பிட வேண்டும். வெள்ளம், வறட்சி எது வந்தாலும் மக்கள் வயிறு நிறைய சாப்பிட்டு நிம்மதியாக இருக்க வேண்டும். நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் ஏழை மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவேன்.

கஜானாவில் பணம் இல்லை

நான் ஆட்சியில் இருந்த வரைக்கும் கஜானா நிரம்பியே இருந்தது. எடியூரப்பா ஆட்சிக்கு வந்த பிறகு கஜானாவில் பணம் இல்லை. சமுதாய பவன் கட்ட நிதி ஒதுக்குமாறு மந்திரி ஸ்ரீராமுலுவிடம் கேட்டேன். கஜானாவில் பணம் இல்லை என்று எடியூரப்பா கூறிவிட்டதாக சொல்கிறார். நான் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறேன்.

தற்போது பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் சில மந்திரிகள் எனது பேச்சை கேட்கிறார்கள். அவர்களிடம் சொல்லி உங்களின் பணிகளை செய்து கொடுக்க முடியும். இந்த தொகுதிக்கு 7,000 வீடுகளை ஒதுக்குமாறு வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணாவிடம் கேட்டேன். நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறிவிட்டார்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு