மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் பயங்கரம் முன்விரோதத்தில் வாலிபர் குத்திக் கொலை மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

பெங்களூருவில் முன்விரோதத்தில் வாலிபரை குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைத்து துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூரு அனுமந்தநகர் அருகே ராஜேந்திரநகரில் வசித்து வந்தவர் பரத் (வயது 20). இவரது சொந்த ஊர் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா ஆகும். நேற்று முன்தினம் இரவு அனுமந்த நகர் அருகே காளிதாசா லே-அவுட் பகுதியில் பரத் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பரத்தை வழிமறித்தனர்.

பின்னர் அந்த மர்மநபர்கள் நடுரோட்டில் வைத்து பரத்தை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டனர். பலத்த கத்திக்குத்து காயம் அடைந்து உயிருக்கு போராடிய பரத் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே பரத் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு