மாவட்ட செய்திகள்

கடம்பத்தூரில் 205 பேருக்கு வீடு கட்ட ஆணை

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மறுகட்டுமான பணி கோட்டம் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

திருவள்ளூர்,

இதற்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக என்ஜினீயர் செல்வமணி, திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. கோ.ரவிராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர். நகர், அகரம், கசவநல்லாத்தூர், விடையூர், காரணி, இந்திராநகர் போன்ற பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 205 பேருக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் உதவி நிர்வாக என்ஜினீயர் இளம்பரிதி, உதவி பொறியாளர் செந்தில்முருக ஜெயக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வாசுதேவன், கே.என்.தாஸ், பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்