பொன்னேரி,
கடற்கரை, பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். பழவேற்காட்டிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா வந்த குடி மகன்கள் பழவேற்காடு பஜாரில் உள்ள மது கடைக்கும் படையெடுத்தனர். இதனால் மதுக்கடை திறப்பதற்கு முன்னரே அந்த கடையின் முன்பாக கடும் கூட்டம் நிலவியது.
மதியம் 12 மணியளவில் மதுக்கடை திறக்கப்பட்டதும் அவர்கள் மது வாங்க ஒரே நேரத்தில் முண்டியடித்தனர். இதனால் மது பிரியர்களுக் குள் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மதுக்கடை ஊழியர்கள் மதுபாட்டில்களை கொடுக்க முடியாமல் திணறினர். மது பாட்டில் வாங்க மது பிரியர்கள் மணி நேரம் வரை காத்திருந்தனர்.