மாவட்ட செய்திகள்

பெரியமேட்டில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு கொள்ளையர்கள் அட்டூழியம்

கொள்ளையர்கள் சிலர், நான்கைந்து கடைகளின் பூட்டை உடைத்துள்ளனர். 2 கடைகளில் பணத்தை கொள்ளை அடித்து சென்று விட்டனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை பெரியமேடு பகுதியில் கொள்ளையர்கள் சிலர், நான்கைந்து கடைகளின் பூட்டை உடைத்துள்ளனர். 2 கடைகளில் பணத்தை கொள்ளை அடித்து சென்று விட்டனர். பெரியமேட்டில் மாட்டுக்கார வீரபத்திரன் தெருவில் உள்ள மணிமாறன் என்பவரின் மளிகை கடையில் ரூ.35 ஆயிரம் மற்றும் பொருட்களை மூட்டை கட்டி அள்ளிச்சென்று விட்டனர்.

அருகில் உள்ள இன்னொரு கடையின் பூட்டை உடைத்துள்ளனர். ஆனால் அந்த கடையில் திருடுவதற்கு எதுவும் சிக்கவில்லை. அடுத்து அதே தெருவில் தோல் கம்பெனி ஒன்றிலும் பூட்டை உடைத்து புகுந்துள்ளனர். அங்கும் எதுவும் சிக்கவில்லை.

பின்னர் கொள்ளையர்கள் அதே பகுதியில் உள்ள பெரியண்ண மேஸ்திரி தெருவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் கடையை உடைத்துள்ளனர். அங்கு ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களையும் அள்ளிக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். நேற்று முன்தினம் இரவு நடந்த கொள்ளையர்களின் இந்த அட்டூழியம் குறித்து பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு