பூந்தமல்லி,
தமிழகத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆவடி அருகே பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணப்பாளையம் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி எண் 195-ல் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
மாலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தி.மு.க. முகவர் வெளியே வந்ததாகவும், அப்போது அங்கு வந்த அ.ம.மு.க.வினர் வாக்குச்சாவடிக்குள் சென்று பார்த்தபோது அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கள்ள ஓட்டு போட்டுக்கொண்டு இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.