மாவட்ட செய்திகள்

பூந்தமல்லியில் வாக்குச்சாவடிக்குள் புகுந்து அ.தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டதாக புகார், அ.ம.மு.க.-தி.மு.க. போராட்டம்

ஆவடி அருகே பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணப்பாளையத்தில் வாக்குச்சாவடிக்குள் புகுந்து அ.தி.மு.க. கள்ள ஓட்டு போட்டதாக வாக்குப்பதிவு எந்திரங்களை எடுக்க விடாமல் அ.ம.மு.க. மற்றும் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

பூந்தமல்லி,

தமிழகத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆவடி அருகே பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணப்பாளையம் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி எண் 195-ல் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

மாலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தி.மு.க. முகவர் வெளியே வந்ததாகவும், அப்போது அங்கு வந்த அ.ம.மு.க.வினர் வாக்குச்சாவடிக்குள் சென்று பார்த்தபோது அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கள்ள ஓட்டு போட்டுக்கொண்டு இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்