மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில பெண் மர்மச்சாவு

ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில பெண் மர்மமான முறையில் இறந்தார்.

தினத்தந்தி

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செட்டிபேடு பகுதியில் தங்கி தண்டம் பகுதியில் உள்ள பெண்கள் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தவர் சுங் சூன் மொய் (வயது 22). நாகலாந்து மாநிலத்தை சேர்ந்தவர். இவருடன் 10 வடமாநில பெண்கள் தங்கி இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்று தூங்கி விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை மற்ற பெண்கள் எழுந்து பார்த்தபோது சுங் சூன் மொய் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் விநாயகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு