மாவட்ட செய்திகள்

விற்பனையாளர் படுகொலையை கண்டித்து, கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விற்பனையாளர் படுகொலையை கண்டித்து கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

கரூர்,

மாவட்ட அனைத்து டாஸ்மாக் ஊழியர் சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜதுரை மற்றும் ராஜேஸ் கண்ணன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் ராஜாவை படுகொலை செய்த நபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இறந்த ராஜாவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, அவரது வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்