மாவட்ட செய்திகள்

மாசிமக தீர்த்தவாரி

திரவுபதி அம்மன் கோவிலில் மாசி மக திருவிழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் எதிரே உள்ள குளத்தில் சாமி எழுந்தருளினர்.

தினத்தந்தி

அச்சரப்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் காசிபாட்டையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் மாசி மக திருவிழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் எதிரே உள்ள குளத்தில் சாமி எழுந்தருளினர். குளக்கரையில் சிறப்பு பூஜைகள் நடந்த பின்னர் அஸ்திராயருடன், சிவாச்சாரியார்களும், சக்கரவர்த்தாழ்வாருடன் பட்டாச்சாரியார்களும் குளத்தில் இறங்கி தீர்த்தவாரி நடத்தினர்.

அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், பெரும்பேர் கண்டிகை மலை மீது உள்ள வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியசாமி மாசி மக தீர்த்தவாரிக்காக 5 கிலோ மீட்டர் தூரம் எடையாளம் கிராமத்திற்கு எழுந்தருளினார். அங்குள்ள ஆற்றில் சிவாச்சாரியார்கள் தீர்த்தவாரி நடத்தினர். பிறகு முருகர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்