மாவட்ட செய்திகள்

போலியோ சொட்டு மருந்து வழங்கிய நர்சுகளுக்கு மேயர் பிரியா சான்றிதழ் வழங்கி பாராட்டு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 27-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 6 லட்சத்து 19 ஆயிரத்து 159 குழந்தைகள் பயன் அடைந்தனர்.

தினத்தந்தி

இந்நிலையில், தேசிய தடுப்பூசி தினத்தையொட்டி, ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 2022-ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய நகர சுகாதார நர்சுகள், துணை நர்சுகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் சிறப்பான பணியை பாராட்டி பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று சான்றிதழ்களை வழங்கினார்.

ஒரு மண்டலத்துக்கு 3 நபர்கள் வீதம் 45 பணியாளர்களுக்கு நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் டாக்டர் எஸ்.மனிஷ், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்