மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி மெக்கானிக் சாவு

திருவள்ளூர் அருகே மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

மெக்கானிக்

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 55). இவர், இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இரு சக்கர வாகன மெக்கானிக்கான பச்சையப்பன் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக சென்னைக்கு சென்று விட்டு மீண்டும் மணவாளநகர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அவர் வெங்கத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே மாட்டு வண்டி ஒன்று வந்தது.

சாவு

இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாரதவிதமாக மாட்டுவண்டி மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு