மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; மீனவர் பலி

கும்மிடிப்பூண்டியில் மோட்டார் சைக்கிள்-வேன் மோதியதில் மீனவர் பலியானார்.

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் தேசப்பன் (வயது 45). மீனவர். இவரது மனைவி சர்மிளா (38). இவர்களுக்கு தருண் (15) என்ற மகனும், தர்ஷினி (14) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆரம்பாக்கம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் தேசப்பன் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலை வழியே மோட்டார் சைக்கிளில் வந்தபோது, எதிரே வந்த தனியார் நிறுவன மினி லோடு வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு