மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மணவாளநகர், திருப்பாச்சூர், பிரயாங்குப்பம் கடம்பத்தூர், அகரம், புதுமாவிலங்கை, சத்தரை, பேரம்பாக்கம், மப்பேடு, கூவம், குமாரச்சேரி, பண்ணூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் தினந்தோறும் அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

இதன் காரணமாக காலை 8 மணி வரை சாலை தெரியாத அளவிற்கு வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனி மூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால் காலை நேரத்தில் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் எதிரே வரும் வாகனங்களை கவனிக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டு மெதுவாக ஊர்ந்து செல்வதையும் காணமுடிகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்