மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம

நாகர்கோவிலில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள். மேலும் அங்கேயே கஞ்சி காய்ச்சியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகராட்சி பகுதியில் 11 இடங்களில் ரூ.9 கோடியில் உரக்கிடங்குகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு இடம்தான் 38-வது வார்டுக்கு உட்பட்ட வட்டவிளை நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் உள்ள பகுதியாகும். இந்த பகுதியில் உரக்கிடங்குகள் அமைப்பதற்காக ஆரம்பகட்டப் பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்தது. தற்போது உரக்கிடங்குகள் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இந்த பகுதியில் உரக்கிடங்கு அமைந்தால் தங்களுக்கும், தங்களது பிள்ளைகளுக்கும் சுகாதாரக்கேடு ஏற்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஊர் மக்கள் சார்பில் ஊர் நிர்வாகிகள் நகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்